மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான
மாற்றம் என்றே உளவியளாலர்கள் கருதுகின்றனர். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஏதோ ஒரு வகையில் வாழ்வின் அனைத்துப் பாகங்களையும் கற்கின்றான். கல்வி கற்பதற்காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதியை செலவு செய்கிறான். சில சந்தர்ப்பங்களில் தான் கல்வியின் உச்சத்தை அடைந்து விட்டதாக கூறியும் இறுமாப்புக் கொள்கின்றான். கல்வி கற்றுத் தேறிவிட்டால் சுவர்க்கப்பேறு பெற்றவன் போல் மகிழ்ச்சி அடைகின்றான். கல்வி கற்காதவனை கற்ற வர்க்கம்...
ஏளனம் செய்கின்றது. இவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகள், உனர்ச்சிப் புறல்வுகள் உருவாக காரணம் ‘கற்றல்’ எனின் “மனித வாழ்வில் கல்வி ஏன் அவசியம்? ”, “நாம் ஏன் கல்வி கற்க வேண்டும்” என்பது பற்றி தெளிவாக நோக்குவது பொருத்தப்பாடுடையதொன்றாகும்.
“கல்வி கற்காதவன் ஒரு விலங்குக்கு சமம்”
- சூழலையும், சமூகத்தையும் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளுதல்
மனிதனாக பிறந்த எமக்கு எம்மைத் சூழ்ந்துள்ள சூழலைப் பற்றிய அறிவு முக்கியமானது. ஏன் எனில் சூழலில் தான் ஒரு மனிதன் ஆரோக்கியம் தங்கியுள்ளது. எனவே தான் மனிதன் சூழலைப் பற்றிய அறியத் துடிக்கின்றான். ஏராளமான பிரயத்தனங்களை செய்கின்றான். இங்கு சூழலை விளங்கிக் கொண்டால் தான் அச் சூழலில் இருக்கும் சமூகத்தை விளங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக வேடுவர் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அவர்களது மொழி, பண்பாடு, கலாச்சாரம், நடை, உடை, பாவணை அனைத்தையும் அறிய கற்றல் அவசியம். எனவே ஒரு சமூகத்தை பற்றி நாம் அறிய விரும்பினாலோ அல்லது சூழலைப் பற்றி அறிய விரும்பினாலோ கற்றல் அவசியம் எனலாம்.
- மொழியாற்றலை வளர்த்துக் கொள்ளதல்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தொடர்புகளைப் பேண வேண்டுமாயின் அதற்கு அம்மனிதனுக்கு மொழி அவசியம். அம் மொழி சமூகத்துக்கும் இனத்துக்கும் ஏற்ப மாறுப்படும். குறிப்பாக பேச்சு மொழி, எழுத்து மொழி என மொழி வகைப்படினும் இந்த மொழிப்பற்றிய அறிவு கற்றலினூடாகவே சாத்தியம் எனலாம்.
- மனிதப் பண்புகள் வளர்ச்சி பெறும்
நன்மை, தீமை என்றும் நல்லவை, கெட்வை என்றும் பிரித்தறிகின்றோம் என்றால் அவை எமது எண்ண்ணங்களின் உள்ள உந்துதலே ஆகும். இங்கு மேற்க்கூறிய மனப்பான்மைகள் உருவாவதற்கு கற்றல் மிகவும் அவசியம். இதுவே மனிதனை மனிதனாக வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி செய்கின்றது ஏன்றால் மிகையாகாது.
- வேலை வாயப்புகளைப் பெற்றுக் கொள்ளல்.
பண்டைக் காலத்தில் முனிவர்கள் தமது ஆச்சிரமங்களிலே சிஷ்யர்களைப் பயிற்றுவித்த போது அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன் எம் மூதாதையர் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடத்திய போது அறிவு பெறுவதே அன்றைய நோக்கமாக இருந்தது. “கல்வி கல்விக்காக” என்பதே அன்றைய கோட்பாடு. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அதுவும் வளர்முக நாடுகளான எம் நாடுகள் போண்றவற்றில் கல்வி கல்விக்காக என்பதைவிட வாழ்க்கைக்கான வழியொன்றை அமைத்துக்கொள்வதே கல்வியின் பிரதான குறிக்கோளாகும். நவீன உலகில் நாம் ஓர் நிரந்தரமான சமூகப் பொறுப்பள்ள ஓர் உண்ணதமான வேலைவாய்பினைப் பெற்றக் கொள்ள வேண்டும் எனில் நாம் எந்த துறையைத் தேர்ந்தெடுக் கொள்கின்றோமோ, எந்த துறையில் வேலை வாய்பை பெற்றுக் கொள்ள நிணைக்கின்றோமோ அந்தத் தொழில் சார் விடயங்களைக் கற்றுத் தேறியிருக்க வேண்டும். குறிப்பாக ஓர் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுகின்ற போது குறிப்பிட்ட தொழிலில் அவருக்கு இருக்கும் கற்றல் தேர்ச்சியைக் கருத்திற்க் கொண்டே அவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது.
- நினைவாற்றலை வளர்ப்பதற்கு.
நல்ல நினைவாற்றல் ஒருவனுக்க இருக்க வேண்டும் எனின் திறம்பட கற்றல் அவசியம். நாம் எழுந்தமானமாக, பூரன விளக்கமில்லாமல் மேலோட்டமாக கற்ற ஒரு விடயத்தை நினைவில் வைத்திருக்க முடியாது. நாம் முழு விளக்கத்தோடு கற்ற ஒரு விடயத்தை எம் மனதிலே உள்ளெடுத்து அதை திரும்பத் திரும்ப நினைவுக்கு (மனதுக்கு) எடுத்து கொண்டு வருவதன் மூலமாக எமது நினைவாற்றல் எம்மை அறியாமலே வளர்க்கப்படும். சிலர் நினைக்கலாம் நினைவாற்றலுக்கும் கற்றலுக்கும் என்ன தொடர்வு என்று. இங்கு ஒன்றை விளங்;கிக் கொள்ள வேண்டும். நாம் பாடசாலை சென்றோ அல்லது ; நாளாந்தம் கண்முன்னே கற்றுக் கொள்ளும் அனுபவப் பாடங்கள் மூலமோ கற்றுக்கொண்ட விடயமொன்றை ஞாபகப்படுத்தி குறிப்பிட்ட கால அவகாசத்தின் பின்னர் அதே நிகழ்வை அல்லது நாம் கற்றக்கொண்ட அதே அறிவை திரும்பப் பெற வேண்டும் என்றால் நினைவாற்றல் சீராக இருக்க வேண்டும். எனவே இதிலிருந்து ஒரு விடயம் எமக்கு புலனாகிறது. நினைவாற்றலை வளர்த்தக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் கற்றல் வேண்டும்.
- ஆளுமையை வளர்ப்பதற்கு
கல்வியின் மிகப் பிறதான நோக்கம் யாது எனில் ஒருவன் கல்வி கற்பதன் மூலம் சிறந்த ஆளுமையுடைய ஒரு சமூக சிற்பியாக தன்னை உருவாக்கிக் கொள்வதே எனலாம். இதனையே குழந்தையின் தனித்தன்மை அல்லது ஆளுமை வளர்ச்சி பெறுவதே கல்வியின் பிறதான நோக்கமாக இருத்தல் வேண்டும். என ரி..பி.நன் என்ற ஆய்வாரள் கூறியுள்ளார்.
- நல்லொழுக்கத்தை கட்டியெழுப்புதல்.
மனிதனாகப் பிறந்த நாம் எத்தணையோ எண்ணங்களையும், நோக்கங்களையும் அடி மனதில் ஆளப் புதைத்துவிட்டு அதன்படி கற்க முயல்கின்றோம். ஆனால் நாம் கற்கும் கல்வியின் இறுதி இலக்கு யாதாக இருக்க வேண்டும் எனில் அது நிச்சயமாக நல்ல ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் வளர்ப்பதாகவே இருக்க வேண்டும். இக் கருத்துக்களைத் தான் பல்வேறு தரப்பினர்களும் கூறுகின்றனர். குறிப்பாக கிரேக்கத் தத்துவ ஞானி ‘அரிஸ்ரோட்டில்’ கல்வியின் இலக்கு பற்றி கூறுகின்ற போது “கல்வியின் இறுதி நோக்கம் மாணவர்களுடைய நல்லொழுக்கத்தையும், அறபண்புகளையும் வளர்த்தலாகும்.” என்றார். இக்கருத்தை கல்வி உலகிற்கு முதன் முதலில் கூறியவரும் இவரே. கல்வியின் இறுதி இலக்கு யாதாக இருக்க வேண்டும் என கூறிய ‘ஹெர்பார்ட்’ என்பவரது கருத்துப்படி “கல்வியின் உண்மையான முழுப்பயன் நல்லொழுக்கத்தை எனும் சொல்லுக்குள்ளேயே அடங்கவதாகும்” என்றார்.
- திறன்களை வெளிப்படுத்துவதற்கு
ஒரு மனிதனது இன்னோரன்ன சமூகத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு காரணமாக அவனுள்ளே இலைமறைகாயாக இருக்கின்ற அவனது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அல்லது வெளிக்கொணர்வதற்கு தேவையான ஆற்றல் கற்றல்;ன் மூலமே பெறப்படுகிறது எனலாம். இதனை ‘Nஐhன் டூயி’ “உண்மைடயான கல்வி குழந்தையின் சமூகத் தேவைகள் நிறைவேற அதன் திறமைகள் தூண்டப்படுவதனால் விளையும் பயனே ஆகும்.” என்று கூறினார். மனித குலத்தின் கடந்த காலம் முதல் தற்காலம்வரை ‘மனிதன் ஏன் கற்றான்’ அவன் கற்றதன் நோக்கம் என்ன, என பல்வேறுபட்ட தரப்பினராலும் எழுப்பப்பட்டு வந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கும் “மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம்”, “மனிதன் நிச்சயம் கற்க வேண்டுமா” என்ற இக்கட்டுரை விடை பகர்ந்து நிக்கின்றது.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 713
- இணைக்கப்பட்டது: Thursday, September 03 2009 05:30 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 120


















